செய்திகள்
ராமதாஸ்

சிங்கள படையினரால் தமிழக மீனவர்கள் கைது- ராமதாஸ் கண்டனம்

Published On 2020-11-11 02:47 GMT   |   Update On 2020-11-11 02:47 GMT
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் சிங்கள படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கொரோனா காரணமாக சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த சிங்கள படையின் அத்துமீறலும், அட்டூழியங்களும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டதால் ஏற்பட்ட பதற்றம் தணியும் முன்பே மீனவர்களை சிங்கள படை கைது செய்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News