செய்திகள்
தீபாவளி பட்டாசுகள்

ரெயிலில் பட்டாசுகளை கொண்டு சென்றால் சிறை தண்டனை- அபராதம்

Published On 2020-11-11 02:15 GMT   |   Update On 2020-11-11 02:15 GMT
பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
சென்னை:

ரெயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என, எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ‘தீபாவளி என்றால் கொண்டாட்டம்; பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம்,’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, ‘பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்ல செல்லக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்’ என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில்வே பாதுகாப்படை மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் மோகன், பத்ம குமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜ் குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News