செய்திகள்
அரசு அதிகாரி வீட்டில் ரூ.2.98 லட்சம் பறிமுதல்- நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
பேளுக்குறிச்சியில் உள்ள வேலூர் மாவட்ட அரசு அதிகாரி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்தை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 50). இவர் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.92 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக பேளுக்குறிச்சியில் உள்ள செந்தில்வேலுக்கு சொந்தமான வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வங்கி கணக்கு புத்தகம், லாக்கர் சாவி மற்றும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 50). இவர் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.92 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக பேளுக்குறிச்சியில் உள்ள செந்தில்வேலுக்கு சொந்தமான வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வங்கி கணக்கு புத்தகம், லாக்கர் சாவி மற்றும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.