செய்திகள்
எச் ராஜா

முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத தொற்று யாத்திரையால் பரவுமா?- எச்.ராஜா

Published On 2020-11-09 07:22 GMT   |   Update On 2020-11-09 07:22 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பரவாத கொரோனா தொற்று வேல் யாத்திரையால் பரவுமா? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

பாஜக மூத்த  தலைவர் எச்.ராஜா கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா?

எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News