செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

13 மாவட்ட மீனவர்களுக்கு ரூ.65 கோடி நிவாரணம்- அமைச்சர் தகவல்

Published On 2020-11-08 02:22 GMT   |   Update On 2020-11-08 02:22 GMT
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.65 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.65 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும். இந்த பணம் தீபாவளியையொட்டி மீனவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் சென்னையை சேர்ந்த 5 மீனவர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News