செய்திகள்
விழுப்புரத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
விழுப்புரத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்பாஸ் (வயது 31). இவர் விழுப்புரம்- செஞ்சி சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும் கடையில் இருந்த சமையல் எண்ணெய், சோப், பூஸ்ட், ஹார்லிக்ஸ், மைதா, ரவை, கோதுமை பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தன.
இதுபற்றி அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்பாஸ் (வயது 31). இவர் விழுப்புரம்- செஞ்சி சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும் கடையில் இருந்த சமையல் எண்ணெய், சோப், பூஸ்ட், ஹார்லிக்ஸ், மைதா, ரவை, கோதுமை பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தன.
இதுபற்றி அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.