செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது

Published On 2020-11-05 10:14 GMT   |   Update On 2020-11-05 10:14 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை:

மதுரை சிலைமான் அருகே உள்ள அங்காடிமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் சிலைமான் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிலைமான் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து சிலைமான் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News