செய்திகள்
கனிமொழி எம்.பி

வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்கும் பாஜக தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? - கனிமொழி

Published On 2020-11-04 22:37 GMT   |   Update On 2020-11-04 22:37 GMT
வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பா.ஜ.க., தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெற உள்ளது. பாஜகவினரின் இந்த வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பா.ஜ.க., தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? என்று தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பா.ஜ.க., அதுபோலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News