செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 25). பொக்லைன் டிரைவர். இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக சூரப்பூண்டியை சேர்ந்த சங்கர் (36) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.