செய்திகள்
விபத்து பலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-10-31 11:08 GMT   |   Update On 2020-10-31 11:08 GMT
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை டவுன் சொக்கட்டான்தோப்பு பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் கண்ணதாசன் (வயது 32). இவருடைய மனைவி லட்சுமி. இவர் மேலப்பாளையம் சிவராஜபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் மனைவியை கொண்டுபோய் விட்டு விட்டு, டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். தெற்கு புறவழிச்சாலை குறிச்சி பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலைஓரத்தில் கவிழ்ந்தது. இதில் கண்ணதாசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, அங்குள்ள வாய்க்காலுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News