செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தத்தை சேர்ந்தவர் ரவி (வயது 52) இவர் பாப்பிரெட்டிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வெங்கடசமுத்திரம் அருகே சென்றபோது எதிரே வந்த பால் வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.