செய்திகள்
வீட்டில் இருந்த நகை மாயம்- போலீசில் பெண் புகார்
செஞ்சி அருகே வீட்டில் இருந்த 23 பவுன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
செஞ்சியை அடுத்த அப்பம்பட்டை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு சரளா(வயது 22), சந்திரலேகா(20) என்கிற மகள்களும், சந்திரபாபு(19) என்கிற மகனும் உள்ளார்.
இந்த நிலையில் தான் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை சுசீலா வீட்டு பீரோவில் வைத்திருந்தார். கடந்த 22-ந்தேதி பார்த்த போது நகை இருந்தது. அதன்பிறகு பீரோவை அவர் திறந்து பார்க்கவில்லை. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த தாலி சரடு, மோதிரம், செயின் என்று மொத்தம் 23 பவுன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரத்தை காணவில்லை.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா, இது தொடர்பாக அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து நகையை யாரேனும் திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
செஞ்சியை அடுத்த அப்பம்பட்டை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு சரளா(வயது 22), சந்திரலேகா(20) என்கிற மகள்களும், சந்திரபாபு(19) என்கிற மகனும் உள்ளார்.
இந்த நிலையில் தான் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை சுசீலா வீட்டு பீரோவில் வைத்திருந்தார். கடந்த 22-ந்தேதி பார்த்த போது நகை இருந்தது. அதன்பிறகு பீரோவை அவர் திறந்து பார்க்கவில்லை. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த தாலி சரடு, மோதிரம், செயின் என்று மொத்தம் 23 பவுன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரத்தை காணவில்லை.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா, இது தொடர்பாக அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து நகையை யாரேனும் திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.