செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் மேலும் 2,608 பேருக்கு கொரோனா தொற்று- 38 பேர் உயிரிழப்பு

Published On 2020-10-30 19:27 GMT   |   Update On 2020-10-30 19:27 GMT
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 924 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News