செய்திகள்
கரூர் அருகே மின்வாரிய பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர் அருகே மின்வாரிய பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
கரூர்-கோவை ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.சி.சி.டி.யூ. தமிழ்நாடு மின்வாரிய பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கரூர் மின் வட்ட கிளை தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொது செயலாளர் பால்ராஜ், கிராமிய கோட்ட செயலாளர் ரவி, கரூர் நகர கோட்ட செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தொழிலாளர்கள் அனைவருக்கும் 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். மேலும் போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.