செய்திகள்
விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் நீதிமன்றம் அருகில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கோலியனூர் கூட்டுசாலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சாலையாம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (33) என்பவரை வளவனூர் போலீசார் கைது செய்தனர்.