செய்திகள்
கோப்புபடம்

மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published On 2020-10-30 11:22 GMT   |   Update On 2020-10-30 11:22 GMT
மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடவாசல்:

குடவாசல் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கணேசனை கடந்த 8-ந் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த கொலை வழக்கில் கடந்த 27-ந் தேதி மணவாளநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த மோகன் மகன் வாஞ்சிநாதன் (வயது 20) என்பவரை விளமல் பாலத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் ராதாகிருஷ்ணன் (36) என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை போலீஸ் பாதுகாப்புடன் எரவாஞ்சேரி போலீஸ்நிலையம் அழைத்து வந்து கைது செய்தனர். இந்த வழக்கில் மணவாளநல்லூர் ஜெயராமன் மகன் விஜய் (26) என்பவரை நேற்று மயிலாடுதுறையில் எரவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மகேஷ் என்கிற மகேந்திரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News