செய்திகள்
தற்கொலை

ராசிபுரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் காவலாளி தற்கொலை

Published On 2020-10-30 07:46 GMT   |   Update On 2020-10-30 07:46 GMT
ராசிபுரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70) . இவரது மனைவி இறந்து விட்டார். இதையொட்டி அவரது இளையமகன் விஜய் உடன் தங்கிக்கொண்டு விவசாயம் செய்து வந்தார். மேலும் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டலூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கார் மெக்கானிக் பட்டறையில் இரவு வாட்ச்மேன் (காவலாளி) ஆக வேலை பார்த்து வந்தார். வாட்ச்மேன் வேலை பார்த்து வந்த குப்புசாமிக்கு அவரது மனைவி இறந்துவிட்டதால் துக்கத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் வயிற்று வலி, மூட்டு வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு கார் பட்டறைக்கு வேலைக்கு சென்ற அவர் விஷ மருந்தை குடித்து விட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குப்புசாமி இறந்தார். இதுபற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News