செய்திகள்
தற்கொலை

நங்கவள்ளி அருகே பெண் தற்கொலை

Published On 2020-10-28 14:27 GMT   |   Update On 2020-10-28 14:54 GMT
நங்கவள்ளி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேச்சேரி:

நங்கவள்ளி அருகே சின்ன சோரகை ஊராட்சி வேப்பமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 54). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலை குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News