செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-10-28 09:23 GMT   |   Update On 2020-10-28 09:23 GMT
முககவசம் அணியாமல் சென்ற 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி உத்தரவின்பேரில், ஜோலார்பேட்டை அரசு டாக்டர் புகழேந்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் கோபி, சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ஒன்றியம் பெத்துக்கல்லுப்பள்ளி அருகே உள்ள சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனம் ஓட்டிகள் மற்றும் அரசு, தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிந்து செல்கின்றன என வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது முககவசம் அணியாமல் சென்ற 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News