செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்

Published On 2020-10-28 07:12 GMT   |   Update On 2020-10-28 07:12 GMT
திரையரங்குகளை திறப்பது குறித்து கலெக்டர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை நடத்திய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களிடம் கூறியதாவது:

* கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

* எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

* பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பண்டிகையொட்டி மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

* காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்திட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பருவமழைக்காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

* கோவிட் சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளை பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும்.

* திரையரங்குகளை திறப்பது குறித்து கலெக்டர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மலைப்பாங்கான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய தார்ப்பாய்களை வைத்திருக்க வேண்டும்.

* கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News