செய்திகள்
கடன் பிரச்சினையில் ரெயில்வே ஊழியர் தற்கொலை
கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ரெயில்வே ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்மலைப்பட்டி:
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் ஷேக் மம்மூட் (வயது 35). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் சீனியர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அதிக கடன் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.