செய்திகள்
கோப்புபடம்

குறைந்த விலைக்கு நகை வாங்கித்தருவதாக ரூ.8½ லட்சம் மோசடி - 4 பெண்கள் மீது வழக்கு

Published On 2020-10-26 11:05 GMT   |   Update On 2020-10-26 11:05 GMT
குறைந்த விலைக்கு நகை வாங்கித்தருவதாக ரூ.8½ லட்சம் மோசடி செய்த 4 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர்,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா(வயது 47). இவரிடம் சில பெண்கள் பழகி வந்துள்ளனர். அவர்கள் அலங்காநல்லூரில் உள்ள ஒரு நகைக்கடையில் குறைந்த விலைக்கு நகைகள் விற்கிறார்கள். பணம் கொடுத்தால் அந்த கடையில் இருந்து குறைந்த விலைக்கு நகைகளை வாங்கித்தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய சித்ரா, அவர்களிடம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்து உள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நகை வாங்கித்தராமல் அந்த பெண்கள் இழுத்தடித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சித்ரா, தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டும் கொடுக்கவில்லை.

இதையடுத்து 4 பெண்கள் மீது அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் அய்யூரை சேர்ந்த கார்த்திகா, பாப்பாத்தி, மதுரை பெத்தானியாபுரம் சியாமளா, மெட்டிலா ஆகிய 4 பெண்கள் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News