செய்திகள்
முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் பார்த்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும், அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.
லாலாபேட்டை:
லாலாப்பேட்டை கடைவீதிகளில் உள்ள பெட்டி, மளிகை கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நேரு தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளின் உரிமம் சரியாக உள்ளதா?, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். மேலும், கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் பார்த்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும், அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.