செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது

Published On 2020-10-24 14:36 GMT   |   Update On 2020-10-24 14:36 GMT
தஞ்சை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். தஞ்சை நகரில் மட்டும் பழைய பஸ் நிலையம், பூச்சந்தை, தெற்கு அலங்கம், பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேரை கைது செய்தனர். இதேபோல் போலீசார் மாவட்ட முழுவதும் மேற்கொண்ட சோதனையில் பட்டுகோட்டை பகுதியில் ஒருவரும், திருச்சிற்றம்பலம் பகுதியில் 2 பேரும், அய்யம்பேட்டையில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News