செய்திகள்
முக ஸ்டாலின்

ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம்- முக ஸ்டாலின் மீது வழக்குபதிவு

Published On 2020-10-24 13:47 GMT   |   Update On 2020-10-24 13:47 GMT
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம் நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சென்னை:

7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன்பு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News