செய்திகள்
காங்கேயம் தீயணைப்பு துறை சார்பில் வியாபாரிகளுக்கு முககவசம் வினியோகம்
காங்கேயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட், கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது.
காங்கேயம்:
காங்கேயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட், கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.