செய்திகள்
கோப்புபடம்

நொய்யல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் மீது வழக்கு

Published On 2020-10-24 12:22 GMT   |   Update On 2020-10-24 12:22 GMT
நொய்யல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பெண்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அந்த கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த கடையின் உரிமையாளர் ராசம்மாள்(வயது 60) என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக புங்கோடையை சேர்ந்த கனகு(55) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News