செய்திகள்
தற்கொலை

வெவ்வேறு பகுதிகளில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2020-10-24 10:28 GMT   |   Update On 2020-10-24 10:28 GMT
வெவ்வேறு பகுதிகளில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அருண் பாண்டி (வயது 26). கார் டிரைவர். இவர் வீட்டில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அதனை அவருடைய தாய் செல்வி கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் பாண்டி இறந்தார்.

இதேபோல் கொடைக்கானலை அடுத்த பள்ளங்கி கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேண்டாம்மணி (60). இவர் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News