செய்திகள்
திருச்செந்தூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
திருச்செந்தூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (வயது 28) . இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அடைக்கலாபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த சிவகுமார் அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (வயது 28) . இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அடைக்கலாபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த சிவகுமார் அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.