செய்திகள்
சிவகாசி அருகே மது விற்ற 2 பேர் கைது
சிவகாசி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில் எம்.புதுப்பட்டியை சேர்ந்த லிங்கவேல் மகன் கூடலிங்கம் (வயது 43), சுக்கிரவார்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் மகன் அசோக்குமார் (27) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்களையும், ரூ.1,810-யும் பறிமுதல் செய்தனர்.