செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை- மு.க.ஸ்டாலின்

Published On 2020-10-24 06:41 GMT   |   Update On 2020-10-24 06:41 GMT
நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு  திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது உரையாற்றிய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி ஏற்படுகிறது.

ஆளுநரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்காவிடில் எதிர்க்கட்சித் தலைவராக நான் கேள்வி கேட்பேன். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன்

* கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை

* நீட் தேர்வில் நிறைய ஆள் மாறாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

* மாணவர்களுக்கு நீட் தேர்வு பலிபீடமாக உள்ளது.

* நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை.

* இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுப்பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News