செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2020-10-24 04:21 GMT   |   Update On 2020-10-24 04:21 GMT
ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம், கல்வி ஆகியவை இன்றியமையாதது.

தமிழக மக்கள் எல்லா நலன், வளங்களுடன் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News