செய்திகள்
கோப்புபடம்

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது

Published On 2020-10-22 09:48 GMT   |   Update On 2020-10-22 09:48 GMT
திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 54). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உயர் மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுமி இது குறித்து தன்னுடைய பெற்றோர்களிடம் கூறி உள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Tags:    

Similar News