செய்திகள்
தற்கொலை

திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-21 13:17 GMT   |   Update On 2020-10-21 13:17 GMT
திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி லட்சுமி (40). இவர்களுக்கு லட்சுமி பிரியா (17) என்ற மகள் உள்ளார். சிவக்குமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக சிவக்குமார் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி பொழுதை கழித்ததாக தெரிகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதற்கிடையே நேற்று மதியம் மனைவி, மகள் வெளியில் சென்றிருந்த நிலையில் வீட்டில் உள்ள விட்டத்தில் சிவக்குமார் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News