செய்திகள்
தற்கொலை

புகை பிடிப்பதை கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-21 10:13 GMT   |   Update On 2020-10-21 10:13 GMT
கொடைக்கானலில் புகை பிடிப்பதை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி 4-வது தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 40). கோர்ட்டு ஊழியர். இவரது கணவர் கருணாகரன். இவர்களது மகன்கள் கிருபிரபாகரன் (15), பிரின்ஸ் பிரபாகரன் (14). தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிரின்ஸ்பிரபாகரன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரன் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால் அமுதா அதே பகுதியை சேர்ந்த இயேசுராஜன் என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.

பிரின்ஸ் பிரபாகரனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவனை இயேசுராஜன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News