செய்திகள்
ஏரி மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திதாங்கல் ஏரியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அதே ஊரை சேர்ந்த மணி (வயது 50) என்பவர் ஏரியில் இருந்து மண் கடத்திவந்தது தெரிந்தது. அவரை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து மணியை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.