செய்திகள்
திருட்டு

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு

Published On 2020-10-20 08:59 GMT   |   Update On 2020-10-20 08:59 GMT
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 65). இவர் நெல்லை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அழகப்பபுரத்தில் தனது மகன், மருமகள், 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுவாமிதாஸ், தனது பேரனுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பேரனின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மேஜையில் இருந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றான்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பேரனின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மற்றும் செல்போன் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News