செய்திகள்
கோப்புபடம்

குடவாசல் அருகே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-20 08:58 GMT   |   Update On 2020-10-20 08:58 GMT
குடவாசல் மற்றும் வலங்கைமானில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடவாசல்:

குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் குடவாசல் வட்ட தலைவர் குரு.அண்ணாதுரை தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்தை மாவட்ட நிர்வாகம் பணியிலிருந்து விடுவித்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டச்செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.

இதேபோல் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வலங்கைமான் வட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News