செய்திகள்
தற்கொலை

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2020-10-20 08:48 GMT   |   Update On 2020-10-20 08:48 GMT
நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை:

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் பினு. இவருடைய மகள் ஜினு (வயது 19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

நேற்று மதியம் வீட்டில் அறையில் இருந்த ஜினு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்ற போது, ஜினுவின் உடல் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News