செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா- எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்

Published On 2020-10-20 07:36 GMT   |   Update On 2020-10-20 07:36 GMT
கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
சென்னை:

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை காவிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆஸ்பத்திரி சென்று அமைச்சர் துரைக்கண்ணுவிடம் காணொலி காட்சி வழியாக பேசி, நலம் விசாரித்தார்.

மேலும் அவரது உடல் நிலை குறித்து காவிரி ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் டாக்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் துரைக்கண்ணு குடும்பத்தாரையும் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News