செய்திகள்
கோப்பு படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா

Published On 2020-10-19 10:18 GMT   |   Update On 2020-10-19 10:18 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,955 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 9,923 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 9,528 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று 1,120 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 32 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,955 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News