செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-10-19 07:44 GMT   |   Update On 2020-10-19 07:44 GMT
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் சமுதாயக் கூடத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் சமுதாயக் கூடத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டது. பரிசோதனை முடிவு வந்த பின் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். இதில், தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News