செய்திகள்
நெல்லை அருகே மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வண்ணார்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வம் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.