செய்திகள்
மழை

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-15 09:00 GMT   |   Update On 2020-10-15 09:00 GMT
தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை  ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இரணியல், பெரியாறு பகுதியில் தலா 5 செ.மீ., சித்தார், குளைச்சல் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News