செய்திகள்
தற்கொலை

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-10-14 08:25 GMT   |   Update On 2020-10-14 08:25 GMT
கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (70). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி மல்லிகா (58) கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News