செய்திகள்
விபத்து

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பூக்கடை உரிமையாளர் உயிரிழப்பு

Published On 2020-10-13 10:15 GMT   |   Update On 2020-10-13 10:15 GMT
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பூக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59). இவர் வெங்கமேடு பகுதியில் சொந்தமாக பூக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூக்கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்மங்கலம் பைபாஸ் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையை கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற லாரி டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த ராமு (38) என்பவர் மீது கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News