செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி அருகே மது விற்ற முதியவர் கைது
திருக்காட்டுப்பள்ளி அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அடுத்த வரகூர் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக திருக்காட்டுப்பள்ளி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மது விற்ற பெரியான்(வயது80) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.