செய்திகள்
தற்கொலை

திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2020-10-11 07:43 GMT   |   Update On 2020-10-11 07:43 GMT
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:

உளுந்துார்பேட்டை தாலுக்கா நத்தாமுர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் வைத்தீஸ்வரி(வயது 20). இவர் திருக்கோவிலூரை அடுத்துள்ள அத்தண்டமருதூர் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி திருவெண்ணைநல்லூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். 

சம்பவத்தன்று வைத்தீஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வைத்தீஸ்வரி பரிதாபமாக இறந்தார். 

மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News