செய்திகள்
சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் வருகிற 14-ந் தேதியில் சென்னை சென்ட்ரல்- கோவை சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14-ந் தேதியில் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
* மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந்தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14-ந் தேதியில் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
* மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந்தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.