செய்திகள்
சேலத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
சேலத்தில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபல ரவுடியான சபரிநாதன் (32) என்பவர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்து ரூ.700-யை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சபரிநாதனை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் விசாரணையில், சபரிநாதன் மீது பள்ளப்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.